weather

img

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை:
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பா. கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.சனிக்கிழமை(ஆக.14) தமிழ் நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

;