செங்கல்பட்டு, ஆக. 6- கொரோனா கால ஊர டங்கில் புலம் பெயர்ந்து தொழிலாளர்களில், சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் துவங்க ஊரக புத்தாக்கத் திட்டத்தில் கட னுதவி வழங்க இருப்பதாக செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ், காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் தெரிவித்துள்ள னர். இத்திட்டத்தின்படி, ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பங் களை சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற லாம். வெளியூருக்கு புலம் பெயர்ந்து கொரோனாவி னால் மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்கள் தொழில் தொடங்குவ தற்காக, ஊராட்சிகளில் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை நீண்ட கால தொழில் கடனாக வழங்கப்பட உள்ளது. இந்நிதியை பெற 18 முதல் 35 வயது உள்ள இளைஞர்களும் மற்றும் 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்களும் தொழில் கடன் தொடங்குவதற்கு தங்களின் ஊராட்சிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திட்ட செயலாக்க அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவல கத்தை (044-27432018) தொடர்பு கொள்ளலாம்.