tamilnadu

சிபிஎம் போராட்ட எதிரொலி நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கம்

செங்கல்பட்டு, செப்.4-  தாம்பரத்திலிருந்து முடிச்சூர், மணிமங்கலம், புஷ்பகிரி வழியாகப் படப்பை வரை 2 பேருந்துகள் இயங்கி வந்தது. இந்நிலையில் படப்பை முதல் புஷ்பகிரி வரை சாலை சரியில்லாத காரணத்தால்  2 பேருந்து களையும் போக்குவரத்து நிர்வாகம் நிறுத்தியது. இதனால் இந்த வழித்த டத்தில் பயணம் செய்த வர்கள் பெரிதும் அவதிப்பட்ட னர். இந்நிலையில், படப்பை - புஷ்பகிரி சாலையைச் சரி செய்திட விலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் சார்பில்  மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சாலை சரி செய்யப்பட்டது. சாலை சரி செய்யப்பட்ட தைத் தொடர்ந்து பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் மாதம் போக்குவரத்து நிர்வாக இயக்குநரிடம் மனு  கொடுக்கப்பட்டது.  ஆனால் நிர்வாகத்தினர் எவ்வித நட வடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், நிறுத்த ப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (செப்.4)  மணிமங்கலம் முதல் படப்பை வரை நடை பயண பிரச்சாரம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டி ருந்தது. மேலும் இந்த பிரச்சா ரம் குறித்து பொது மக்களிடம்  துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து  மணிமங்கலம் காவல் ஆய்வாளர் சவுந்தரராஜன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சிபிஎம் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  சாலையை ஆய்வு செய்து உடனடியாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து  அதிகாரிகள் உறுதியளித்தனர்.  இதுகுறித்து சிபிஎம் திருப்பெரும்புதூர் வட்டச் செயலாளர் பி.ரமேஷ் கூறு கையில்,  ‘போக்குவரத்து அலுவலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேருந்து களை இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது. நிரந்தர மாக பேருந்து இயக்க போக்குவரத்து நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம்’ என்றார்.