செங்கல்பட்டு, பிப். 5- செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் கொளத்தூரில் எஸ்.ஆர். எம். கல்வி நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று மாலை கல்லூரியில் எம்.பி.ஏ. 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே இருதரப்பினரி டையே பயங்கர மோதல் சம்பவம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி அரிவாளுடன் மோதிக் கொண்டனர். இதில் ஒரு மாணவர் கையில் துப்பாக்கியுடன் மற்ற மாணவர்களை நோக்கிச் சுடுவதற்கு சென்றுள்ளார். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் ஒருவர் துப்பாக்கியுடன் மிரட்டு வதை சிலர் வீடியோ எடுத்து வலைத்தளங்க ளில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இந்த தாக்குதலில் சில மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மறைமலை நகர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து வீடியோவில் உள்ள மாணவர்க ளிடம் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா விற்பனை அமோகம்
கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. வடமாநில இளை ஞர்கள் அதிக அளவில் பயிலும் இக்கல்லூரி யில் கஞ்சா விற்பனை செய்வதாக அடிக்கடி காவலர்கள் மாணவர்களை கைது செய்கின் றார். போதையில் மாணவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதும், இருசக்கர வாக னத்தில் அதிவேகத்தில் சென்று விபத்துக் குள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது மாணவர்கள் மத்தியில் கஞ்சா வையும் தாண்டி துப்பாக்கி கலாச்சாரம் வளர்ந்துவருகின்றது. கடந்த வருடம் வண்ட லூர் அடுத்த வேங்கட மங்களம் பகுதியில் கல்லூரி மாணவன் முகேஷ் என்பவரை அவ ரது நண்பர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரி ழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. தற்போது கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற மோதலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியிருப்பது சென்னையின் புறநகர்ப் பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்தில் துப்பாக்கிகள் சுலபமாகக் கிடைப்பதாகத் தெரியவருகின்றது. மாணவர்களிடம் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து மாவட்ட காவல் துறை உரிய விசா ரணை நடத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.