செங்கல்பட்டு, ஆக. 17 - கரும்பு விவசாயிகளுக்கு மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடப்பாண்டில் வழங்க வேண்டிய 12.38 கோடி ரூபாயை உட னடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட படா ளத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல் படுகிறது. இந்த ஆலைக்கு மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக் குன்றம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் கரும்பு களை அனுப்பி வைக்கின்றனர். பற்றாக்குறை ஏற்படும்போது பாண்டிச்சேரியிலிருந்தும் கரும்பு அரவைக்கு பெறப்படுகிறது.
பழைய பாக்கி
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 2015-16ம் ஆண்டுக் கான எஸ்ஏபி பாக்கி ரூ.7.24 கோடி, 2016-17ம் ஆண்டுக்கான எஸ்ஏபி பாக்கி ரூ.4.01 கோடி என மொத்தம் 11.25 கோடி ரூபாயை விவசாயி களுக்கு ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு எஸ்ஏபி நிலுவைத் தொகை 11.25 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சி-செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கே.நேரு வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், மாநில அரசு 2019-20ல் அரைத்த கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.400 ஊக்கத் தொகையை மாநில அரசு வழங்க வேண்டும். 2020-21ல் 9.5 சதவீத பிழி திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு 4,500 ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். இவை குறித்து பலமுறை முறை யிட்டும் ஆலை நிர்வாகம் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பாக்கித் தொகையை கேட்டு ஆக.25ந் தேதி ஆலை யின் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.