tamilnadu

பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க கோரிக்கை

செங்கல்பட்டு, அக்.15-  பாலாற்றில் மாட்டுவண்டி யில் மணல் எடுக்க அனு மதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்து ள்ளது காஞ்சிபுரம் மாவட்ட த்தில் கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக பாலாறு மற்றும் செய்யாற்றில் மணல் எடுக்க தடை உள்ளது. இந்த தடையை மீறி ஆற்றில் மணல் எடுப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.  இருந்தபோதும், இரவு நேரங்களில் லாரிகளில் மணல் திருட்டு தொடர்ந்து வருகிறது. இதை தடுக்கச் செல்லும் அரசு அதிகாரிகள் மீது வாகனத்தை ஏற்றுவது போல் மிரட்டும் நடவடிக்கை யும் தொடர்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகக் காவல் துறை உதவியுடனே  மணல் திருட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது. திருடிவரும் மணலை  ஒரு யூனிட்டுக்கு ரூ. 50 அயிரம் முதல் 70 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். இதனால் தனி நபர்கள் சிலர் லாபம் அடைவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நேரு கூறுகையில் ‘மணல் எடுக்கத் தடை இருந்தும்,  காவல் துறை உதவியுடன் மணல் திருடுவது சாதாரணமாக நடைபெறுகிது. இந்த திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். பொதுப்பணி த்துறை மூலம் மாட்டுவண்டிகளுக்கு அனு மதிச் சீட்டு வழங்குவதுடன், மணலுக்கான விலையையும் நிர்ணயிக்க வேண்டும். இப்படி செய்தால் மணல் திருட்டைத் தடுப்பதுடன் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். மேலும்  பசுமை வீடுகள் கட்டுவதற்கு மணல் கிடைக்காமல் மக்கள் அவதி படுகிறார்கள்.  எம்சாண்ட் மூலம் வீடுகளைக் கட்டுவது தரமற்றதாக உள்ளது. எனவே அரசு வீடுகளைத் தரமாகக் கட்ட மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்.’ என்றார்.