tamilnadu

பேரிடர் கால நிதியை உடனே விடுவித்திடுக

செங்கல்பட்டு, ஜூன் 28 - அவசர தேவைகளுக்கு சுகாதார பொருட்கள் கொள்முதல்  செய்ய பேரிடர் கால நிதியை ஊராட்சி ஒன்றி யங்களுக்கு விடுவிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு அரசாணைபடி 3600 ரூபாயை வழங்க வேண்டும். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய  அலுவலர்கள் 2  பேருக்கும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய  அலுவலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  எனவே ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட அனைத்து கள பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள், மருநதுகள் வழங்க வேண்டும் என்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பரணி, செயலாளர் ப.குணசேகரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.