செங்கல்பட்டு,பிப். 20- செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டு கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டு கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை வரைவு குறித்தான கோரிக்கைகள் பிப் 1 முதல் 8ம் தேதி வரை மனுக்களாக பெறப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கேட்புக்கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணை யத்தால் வரும் 27 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் செங்கல் பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது. மறுவரையறை வரைவின் மீது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதி கள் தங்களுடைய கருத்துக்களை நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.