tamilnadu

பிப். 27 வார்டுகள் மறுவரையறை ஆணைய கருத்துக் கேட்பு கூட்டம்

செங்கல்பட்டு,பிப். 20- செங்கல்பட்டு மாவட்டத்தில்   நகராட்சி,  பேரூராட்சி வார்டு கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டு கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை வரைவு குறித்தான கோரிக்கைகள்  பிப் 1 முதல் 8ம் தேதி  வரை மனுக்களாக பெறப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கேட்புக்கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணை யத்தால் வரும்  27 ஆம் தேதி பிற்பகல் 3  மணியளவில் செங்கல்  பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது. மறுவரையறை வரைவின் மீது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதி கள் தங்களுடைய கருத்துக்களை நேரில்  தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ்  தெரிவித்துள்ளார்.