tamilnadu

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 90.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு, ஜூலை 16- காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில்  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.62 சத வீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம்  வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு  மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்  துறை சார்பாக 43 ஆயிரத்து 451 மாணவர்கள்  தேர்வு எழுதினர். அதாவது, பொதுப் பாடத்  தேர்வில் 41 ஆயிரத்து 842 மாணவ, மாணவி களும், தொழில் பாடப் பிரிவில் ஆயிரத்து 609  மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வியாழனன்று (ஜூலை  16) வெளியிடப்படடது. அதன்படி காஞ்சிபுரம் -  செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 ஆயிரத்து 375  மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். இது தேர்வெழுதிய மாணவர்களில் 90.62 சதவீதமாகும். இந்த அளவானது கடந்த ஆண்டை விட 0.72 சதவீதம் கூடுதலாகும். இதில் மாணவிகள் 93.40 சதவீதமும், மாண வர்கள் 87.25 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவர்களை விட மாணவிகளின் கூடுத லாக 6.15 சதவீதம் தெரச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 369 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை  117. இதில் அரசுப் பள்ளிகளின்  தேரச்சி விகிதம் 81.61 ஆகும். கடந்த ஆண்டு  தேர்ச்சி விகிதத்தில் 23வது இடத்தில் இருந்த  மாவட்டம் இந்தாண்டு 26 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.