செங்கல்பட்டு, பிப். 18- செங்கல்பட்டு நகராட்சி பகுதி களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் சலையில் கொட்டப்படும் குப்பைகளை தானியங்கிக் குப்பை வண்டி இருந்தும் துப்பரவுத் தொழி லாளர்கள் கைகளால் அள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 33 வார்டுகளுக்குட்பட்ட இடங்க ளில் 2018ம் ஆண்டு ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட தானியங்கிக் குப்பை லாரியுடனான 44 குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டிருந்தன. இந்த குப்பைத் தொட்டி களில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிவந்தனர். இவ்வாறு தொட்டிகளில் சேகரமாகும் குப்பை களைத் தானியங்கிக் குப்பை லாரி யின் மூலம் அகற்றி வந்தனர். தற்போது நகரப் பகுதிகளில் வைக் கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் திடீரென அகற்றப்பட்டுள்ளன. இத னால் துப்புரவுத் தொழிலாளர்கள் குப்பைகளை கைகளால் அள்ளிப் போடவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு நக ராட்சி ஆணையரிடம் கேட்டபோது குப்பை வாகனங்களுக்குப் பற்றாக் குறை உள்ளது. மிக விரைவில் சரிசெய்யப்படும் என்றார். இதுகுறித்து நகரப்பகுதி பெண் களிடம் கேட்டபோது நகராட்சி ஊழியர்கள் கால தாமதமாகக் குப்பை களைச் சேகரிக்க வருகின்றனர். பணிக்குச் செல்லும் எங்களால் குப்பைகளை அவர்களிடம் ஒப்ப டைக்கமுடியவில்லை. மேலும் 76 துப்பரவு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 56 பணியா ளர்கள் மட்டுமே உள்ளனர். இவர் களை வைத்து முழுமையாக வீடு வீடாகச் சென்று குப்பைகளை வாங்குவது முடியாது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்று வதற்கான போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செங்கல்பட்டு பகுதி செயலாளர் பரணிவர்மணிடம் கேட்டபோது. 2007ம் ஆண்டு 24 பெட்டிகளுடன் ஒரு குப்பை லாரி வாங்கப்பட்டது அந்த லாரி பயன்ப டுத்தப்படாமல் இன்றுவரை நக ராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே பேன்று சிறிய வகை ஆட்டோக்கள் குப்பை வண்டிக்காக வாங்கப்பட்டது. அந்த வாகனங்களும் பயன்ப டுத்தப்படாமல் காலாவதி யாக்கப்பட்டன. குப்பைத் தொட்டி இல்லா நகரத்தை உருவாக்கத் துப்புரவுத் தொழிலாளர்களை அதிகப்படுத்தவேண்டும் வேண்டும் என்றார்.