செங்கல்பட்டு, டிச.23- காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதி களுக்கு 2020க்கான வரைவு வாக்காளர் பட்டியலை திங்களன்று (டிச.23) காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் பா.பென்னையா வெளி யிட்டார். பின்னர் அவர் செய்தி ளார்களிடம் கூறியதாவது:- வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணி க்கை 37 லட்சத்து 99 ஆயிரத்து 888. இதில் ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 79 ஆயிரத்து 117. பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 20 ஆயிரத்து 277. இதர வாக்காளர்கள் 494 ஆகும். மேலும் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறி யப்பட்டுள்ளது. வாக்காள ர்கள் சிரமமின்றி வாக்களிக்க சோழிங்கநல்லூர் 11, ஆலந்தூர் 1, திருப்பெரு ம்புதூர் 8, செங்கல்பட்டு 1, வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களின் விவரம்:- சோழிங்கநல்லூரில் ஆண்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 028. பெண்கள் 3 லட்சத்து 20 ஆயிரத்து 963. இதரவை 82. மொத்தம் 6 லட்சத்து 46 ஆயிரத்து 073. ஆலந்தூரில் ஆண்கள் 1 லட்சத்து 81 ஆயிரத்து 856. பெண்கள் 1 லட்த்து 84 ஆயிரத்து 993. இதரவை 112. மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 961. திருப்பெரும்பு தூர் (தனி) ஆண்கள் 1 லட்சத்து 62 ஆயிரம். பெண்கள் 1 லட்சத்து 69 ஆயி ரத்து 972. இதரவை 48. மொத்தம் 3 லட்சத்து 32 ஆயி ரத்து 20. பல்லாவரத்தில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 987. தாம்பரத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 101. செங்க பட்டில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 164, திருப்போரூர் 2 லட்சத்து 76 ஆயிரத்து 109. செய்யூர் (தனி) 2 லட்சத்து 17 ஆயிரத்து 316. மதுராந்தகம் (தனி) 2 லட்சத்து 18 ஆயி ரத்து 983. உத்திரமேரூர் 2 லட்சத்து 47 ஆயிரத்து 725. காஞ்சிபுரத்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 449 வாக்காள ர்கள் உள்ளனர். வாக்காளர் பதிவு அலுவ லர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி ஆணை யர் ஆகிய அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - நீக்கல்- திருத்தல் தொடர்பான மனுக்கள் வரு கின்ற டிசம்பர் 23 முதல் ஜனவரி 22 வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்க ளிலும் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - நீக்கல் - திருத்தல் மனுக்கள் தொட ர்பான சிறப்பு முகாம் வருகின்ற ஜனவரி 4, 05, 11, 12 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சா வடி மையங்களிலும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.