செங்கல்பட்டு,பிப்.17- மதுராந்தகம் அருகே ஏலச் சீட்டு நடத்தி ரூ. 12 லட்சம் மோசடி செய்தவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவர் அருங்குணம், சாத்தனூர், புளியரணை கோட்டை, நெட்ரம்பாக்கம் போன்ற கிராமங்களை சேர்ந்த பெண்களிடம் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். நபர் ஒருவருக்கு மாதம் ரூ.700 என 12 மாதங்கள் வசூலித்து தீபாவளி பண்டிகை யின் போது தங்க நகை, பட்டாசு, இனிப்பு வழங்குவதாகக் கூறி 147 பேரிடம் பணம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களி டம் பணம் கட்டியவர்கள் தீபாவளி பண்டிகை வரை காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காத தால் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள னர். புகாரில் எங்களை ஏமாற்றி, மோசடி செய்தவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு சேர வேண்டிய தொகையைப் பெற்றுத் தர நட வடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரி வித்துள்ளனர். புகரை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.