பழங்குடி மாணவரை அவமதித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் எம்.ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், வட்டச் செயலாளர் எம்.எஸ்.அர்ஜூன்குமார், பொருளாளர் எஸ்.துளசி உட்படபலர் கலந்து கொண்டனர்.