செங்கல்பட்டு, ஜூலை 22- கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படு வதாக பொதுமக்கள் குற்றம் சாற்றி யுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் நாள்தோறும் முகாம்கள் நடத்தி தொடர் பரிசோதனை களை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆய்வு முடிவுகள் காலதாமதமாக தெரிவிக் கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணத்திற்கு, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆனால், புதனன்று (ஜூலை 22) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் கண்காணிப்பாளர் கண்ணனின் பெயர் இடம்பெற்றுள்ளது. உயர் அதிகாரி என்ற முறையில் கண்காணிப்பாளருக்கு மட்டும் முன்ன தாகவே பரிசோதனை முடிவு தெரிவிக்கப் பட்டுள்ளாக தெரிகின்றது. அதேசமயம் பொது மக்களுக்கு பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில் ஏற்படும் கால தாமதத்தால், தொற்றுள்ளவர் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திறியும் நிலை உள்ளது. அதன்மூலம் தொற்று பரவுகிறது. எனவே, பரிசோதனை முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டு மென்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.