இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த வில்லிபாக்கம் கிராமத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முகமது உசேன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மபா.நந்தன், செயலாளர் க.புருசோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.