மதுராந்தகம், ஜூலை 13- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய தெருக்களான முருகன் கோவில் தெரு, தேரடித் தெரு, மருத்துவமனை சாலை உள்ளிட்டு வணிக வளாகங்கள் நிறைந்த சாலைகளை தடுப்புகள் அமைத்து நகராட்சி நிர்வா கம் தடை செய்துள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு மதுராந்தகத்தில் உள்ள வணிகர் சங்கங்களின் சார்பில் ஜூலை 13 முதல் 19ம் தேதி வரையிலான 7 நாட்களுக்கு அனைத்து உணவகங்கள், பேக்கரி, காய்கறி சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.