ஹைதராபாத்:
அரசு போக்குவரத்துக்கழகத்தை தனியார்மயமாக்கக் கூடாது என்று வலியுறுத்தி தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் ஊழியர்களை முதல்வர் சந்திரசேகரராவ்பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் கடந்த வாரம் 2 போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்துபோராட்டம் தீவிரமடைந்தது. இதுவரை போக்குவரத்து ஊழியர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தனியார் போக்குவரத்து ஊழியர்கள், லாரி, ஆட்டோமற்றும் கால் டாக்சி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அக்டோபர் 19 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் சுமார் 50ஆயிரம் வாகனங்கள் ஓடவில்லை.