tamilnadu

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், ஜன.12- ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப் பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். டிராலின் குல்சான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது, கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன், ஹிஸ்புஸ் முஜாஹிதீன் அமைப்பு கமாண்டர் ஹம்மத் கான் என்று கூறப்படுகிறது.

;