ஹரியானா மாநிலத்தில் 1.28 கோடி மதிப்பிலான திருடப்பட்ட கைப்பேசிகளை மீட்டு உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளனர். இதில், குர்கானில் அதிகமாக 144, ஹிசாரில் 133, கைதலில் 93, பஞ்ச்குலாவில் 92, சிர்சாவில் 85 கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
2020 ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் 1.28 கோடி மதிப்பிலான 1,215 திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட கைப்பேசிகளை மீட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் ஐடி மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் கண்காணித்து, 1,215 கைப்பேசிகளை மீட்டுள்ளனர். இதில், விலையுயர்ந்த கைபேசிகள் அதிக அளவில் உள்ளன. மீட்கப்பட்டவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தவை. கைபேசியின் தொடர்புகள், கடவுச் சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவை, கைபேசியின் பண மதிப்பைவிட முக்கியம். இதனைத் தொழில்நுட்ப உதவியுடனே செய்துள்ளனர் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.