tamilnadu

img

கொரோனா தொற்றுடன் கொலை குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்

அம்பாலா

கொரோனா தொற்றுடன் கொலை குற்றம் சாட்டப்பட்டவர், கொரோனா தொற்று சிகிச்சைக்கு அழைத்து வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் அம்பாலா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து கொரோனா தொற்று சோதனை செய்த ஒரு கொலை குற்றவாளி தப்பிச் சென்றதாக 
காவல்துறையினர் திங்களன்று தெரிவித்துள்ளனர்.

குமார் ஆகஸ்ட் 7 ஆம் தேதி பஞ்ச்குலா மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அம்பாலா மத்திய சிறைக்கு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் கொரோனா சோதனை செய்யப்பட்டார். அவரது சோதனை முடிவுகளில் மீண்டும் கொரோனா தொற்று உள்ளதை உறுதி செய்தது. பின்னர், சிறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவர் ஒரு தனி வார்டில் மற்றொரு சிறை கைதியுடன் வைக்கப்படுகிறார். பாதுகாப்புக்கு அவரை  கண்காணிக்க ஒரு காவல்துறை குழுவும் அங்கு நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, குமார் தனது படுக்கையில் இருந்து காணவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வார்டில் இருந்த ஜன்னலின் கண்ணாடியை உடைத்து அவர் வார்டில் இருந்து தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இருக்கும் இடம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்க வில்லை  என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

;