tamilnadu

வாகன விபத்தில் 2 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர்,டிச.11- ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (40). மாடு களை வைத்து பால் வியா பாரம் செய்து வந்தார். இவரு டைய வீட்டில் இந்திரசேனா (40) என்பவர் தங்கி மாடுகளை கவனிக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் செவ்வா யன்று  இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சந்த வேலூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த னர். அப்போது அவர்கள் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர் வழியே சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த கார் இருசக்கர வாக னத்தின் மீது மோதியது. இதில் குமாரும், இந்திர சேனாவும்  சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் இரு வரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

;