tamilnadu

கள்ள ஓட்டு போட்டிருந்தால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கலாம்

 வேலூர், ஜூலை 20- வாக்குப்பதிவின்போது கள்ள வாக்குப் போடப்பட்டி ருந்தால் உண்மையான வாக்காளர்கள் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு (டெண்டர் பேலட் பேப்பர்) மூலம் தங்களது வாக்கைப் பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடை பெற உள்ளது. தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 26 ஆயி ரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் மொத்தம்  7,576 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள னர். இவர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதற்கட்ட பயிற்சி கடந்த 14ஆம் தேதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், வாக்குப் பதிவு நாளில் வாக்காளர்களின் வாக்கு ஏற்கெனவே கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டி ருப்பதாக புகார் எழுந்தால், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களின் அடையாளம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். பின்னர், வாக்காளர்கள் ஆய்வுக்குரிய  வாக்குச்சீட்டு (டெண்டர் பேலட் பேப்பர்) மூலம் வாக்க ளிக்க அனுமதிக்கலாம். எனினும் அவர்கள் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த வாக்குகளை தனி யாக கணக்கு வைத்து வாக்குப்பதிவு முடிந்ததும் தனி உறை யில் (படிவம் 17பி) சீல் வைத்து மண்டலத் தேர்தல் அலுவலரி டம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் பிரிவு அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.