தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வேலூர் கிளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சத்துவாச்சாரியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் சினேகா, தமுஎகச மாநிலச் செயலாளர் அன்பரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் க.சரவணராஜ், தமுஎகச கிளைச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். சாரல் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.