கிருஷ்ணகிரி, ஆக. 11- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள கல்லாவியில் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்ட அலுவலகம் உள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு வேளாண் பொருட்களான தானியங்கள், பயிர் வகைகள், விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளிடம் விற்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பொருட்களும் வாங்கப்படுகின்றன. இங்கு மன்னாடிப்பட்டி, சிறுவனப்பட்டி, மேட்டுத்தாங்கள் வெள்ளாளப்பட்டி, கல்லாவி, சிறு மல்நாயக்கன்பட்டி, உட்பட பல கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொருட்களை விற்கவும், வாங்கவும் வந்து செல்கின்றனர்.