tamilnadu

வேலூர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

 வேலூர், செப். 18- காட்பாடி காந்தி நகரிலுள்ள வேலூர் அரசு சட்டக்கல்லூரி யில் 3 ஆண்டு, 5 ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்புகள் உள்ளன.  இந்த கல்லூரியில் மொத்தம் 400 மாணவர்கல் பயில்கின்ற னர். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்புதான் 5 ஆண்டு சட்டப்படிப்பு தொடங்கப்  பட்டது. இந்நிலையில், எல்எல்பி முடித்தவர்கள் மேற்கொண்டு  எல்எல்எம் படிக்க வேறு கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய  சூழ்நிலை உள்ளது. எனவே, வேலூர் அரசு சட்டக்கல்லூரி யில் எல்எல்எம் பிரிவுப் படிப்பைத் தொடக்க வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.