வேலூரில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவரது பட்டாசுக் கடையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகள் பலியாகியுள்ளனர் என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீ விபத்து காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.