india

img

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் தீ விபத்து 

டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் இன்று காலை 9.20 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உச்சநீதிமன்ற வளாகம் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;