tamilnadu

வேலூர், நாகை மற்றும் கன்னியாகுமரி செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

வேலூர், ஏப்.28-அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). வர்ணம் பூசும் தொழிலாளி. இவர், இதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.  


திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

குமரி,ஏப்.28-கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், திற்பரப்பு அருவியில் தற்போது நீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.இதனோடு கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களும் சேர்ந்து கொண்டதால் தமிழகம், கேரளா உள்ளிட்டபல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயணிகள் திற்பரப்பு அருவிக்கு படையெடுத்து வருகின்றனர். இதேபோல் நீச்சல் குளம், சிறுவர் பூங்கா, படகு சவாரி உள்ளிட்டஇடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. 


வெளிநாட்டில் மர்மான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவன்

நாகை, ஏப்.28-செக்குடியரசு நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தகல்லூரி மாணவனின் உடலை மீட்டு தரும்படி குடும்பத்தினர்கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த பணமேடு கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜீவானந்தம், செக்குடியரசு நாட்டில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல்கிடைத்தது.இந்நிலையில் அவரது உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வரவும், மரணத்திற்கான காரணத்தை விசாரிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ள குடும்பத்தினர், மகனை இழந்த சோகத்தில் கதறி அழுதனர்.

;