tamilnadu

img

தேச துரோக வழக்கில் இருந்து வைகோ விடுதலை

சென்னை, ஆக. 30- தமிழக அரசு தொடர்ந்த தேச  துரோக வழக்கில் வைகோ வுக்கு விடுதலை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009ஆம் ஆண் டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலி களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது தேசத்துரோக  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தால், வைகோ குற்றவாளி என நீதி பதி தீர்ப்பு வழங்கினார்.அப் போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதை யடுத்து அவருக்கு ஓராண்டு சிறைதண்டனை மற்றும் 10 ஆயி ரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து மேல்முறை யீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை  நிறுத்தி வைக்கக்கோரி வைகோ  சார்பில் மனு தாக்கல் செய்யப்  பட்டது. அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தி னார்.இதையடுத்து வைகோ வுக்கு வழங்கப்பட்ட சிறைதண் டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை கடந்த  மாதம் 5ஆம் தேதி பரிசீலனை செய்த நீதிபதி, வைகோவின் மனுவை ஏற்று அவருக்கு ஜாமீன்  வழங்கினார்.  இந்நிலையில் இந்த வழக்கை வெள்ளியன்று (ஆக.30)  மீண்டும் விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கரு ணாநிதி, மதிமுக பொதுச் செய லாளர் வைகோவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.