tamilnadu

img

ஷவர்மா விற்பனைக்கு தடை

குடியார்த்தம் பகுதியல் ஷவர்மா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டள்ளது.
சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மா குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. கேரளாவில் சவர்மா சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.  மேலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் குடியார்த்தம் நகர் மன்றத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. அப்போது சுகாதாரமற்ற முறையில் பல கடைகளில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஷவர்மா விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர்.
இதையடுத்து குடியாத்தம் நகர்மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகள் இயங்கி வரும் நிலையில் அந்த கடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் விற்பனை செய்யும் கடைகளை மூடி சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்தார்.