வேலூரில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழையும் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், தொடர் மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.