tamilnadu

img

ஆட்டோவில் தவற விட்ட ரூ. 1.50 லட்சத்தை ஒப்படைத்த ஓட்டுநர்

 வேலூர், ஆக. 16- கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஹரி  தனது தந்தையின் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு சென்றுவிட்டு, மீண்டும் கேராள செல்வதற்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு மருத்துவமனை வாயிலில் இருந்த ஆட்டோவில் ஏறி காட்பாடி ரயில் நிலையம் சென்ற னர். ஆட்டோவை சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த யாகூப் என்பவர்  ஓட்டிச் சென்றார். ரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கிச் சென்றுவிட்டனர்.  யாகூப்பும் வீட்டிற்கு சென்று விட்டார். வியாழக்கிழமை காலை  வழக்கம் போல் யாகூப் ஆட்டோவை எடுக்கும் போது, அதில்  1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி, 25 ஆயிரம் ரூபாய், சில பொருட்கள் அடங்கிய பை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஆட்டோ சங்க கிளைத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, யாகூப் இருவரும் வேலூர் வடக்கு காவல் நிலை யத்தில் அந்த பொருட்களை ஒப்படைத்தனர். அதேபோல் பொருட்களை தவறவிட்ட அரியும் காவல் நிலையம் வந்தார்.  காவல் துறையினர் அந்த பொருட்களை அரியிடம் ஒப்ப டைத்தனர். பொருட்களை பெற்றுக் கொண்ட அரியும், காவல்  துறையினரும் யாகூப்பின் நேர்மையை பாராட்டினர்.