வேலூர் அக். 19- தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை (அக். 19) வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்டத் தலைவர் ம.தேவசேனன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அ.சேகர் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் டி.எஸ்.சாம்தாஸ் வேலை அறிக்கை யையும், பொருளாளர் டி.மணி மாறன் வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.சரவணராஜ், தொழிற்கல்வி ஆசிரியர் கழத்தின் மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜேஷ்கண்ணா, தொடக்கப்பள்ளிபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் அணி சரஸ்வதி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலை வர் தாண்டவராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்செயலாளர் பொன்.ஜெயராமன் கூட்டத்தை நிறைவு செய்து பேசினார். பள்ளிக்கல்வித் துறை சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு பணியிடங்களுக்கு மூடுவிழா நடத்துவதை கைவிட வேண்டும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார ப்படி முதன்மைக் கல்வி அலுவல கங்கள் மற்றும் பள்ளிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்து வதற்கு கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது சுமார் 5,500 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக சொ. கார்தீபன், செயலாளராக டிஎஸ்.சாம்தாஸ்பொருளாளராக டி மணி மாறன் ஆகியோர் தேர்ந்தெடு க்கப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் அ.கங்காதரன் நன்றி கூறினார்.