வேலூர், அக். 2- வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில், மேல் ஆலத்தூர், மூங்கப்பட்டு, காத்தாடிகுப்பம், சின்ன செட்டிகுப்பம், உள்ளிட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் “100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் முழுமையான கூலி வழங்க வேண்டும், ரேசன் கடையில் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல் ஆலத்தூரில் கிளை செயலாளர்கள் எஸ்.சதீஷ்,வி, ரகு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், தாலுக்கா செயலாளர் பி.குணசேகரன், கே.சாமிநாதன், சி.சரவணன், எம்.கதிரவன், சி.நெடுஞ்செழியன், சி.எம்.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காத்தாடி குப்பம் கிராமத்தில் பாண்டுரங்கன், தசரதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், காத்தவராயன், தாலுக்கா குழு உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்ன செட்டிகுப்பம் கிராமத்தில் கிளை செயலாளர்கள் பி.பிச்சாண்டி, சி.அம்சா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், தாலுக்கா செயலாளர் பி.குணசேகரன், சி.சரவணன், சி.எம்.நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூங்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே எம்.சி.முருகேசன், என்.திலகவதி் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.