மத்திய பாஜக அரசு தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதையும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கண்டித்தும் ஞாயிறன்று (மே 10) வேலூர் மாவட்ட சிஐடியு மாவட்ட க்குழு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், செயலாளர் எஸ்.பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.