கொரொனா நோய் பரவலின் காரணமாக வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் விதவைகள், மாற்று திறனாளிகள், குடும்ப அட்டை இல்லாமல் இருக்கும் 50 குடும்பத்தினருக்கு சிபிஎம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் ம.சித்ராதேவி அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார் .இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆறுமுகம், த.சண்முகராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கணேசன் ஆசிரியர், முப்புலிவெட்டி கிளை செயலாளர் பி.சுப்பிரமணியன் ஆகியோர் இருந்தனர்.