வேலூர், நவ.21- வாலாஜாபேட்டை தாலுகா, சோளிங்கர் ஒன்றிய ஒழுவூர் கிராம ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் செ.சரவணன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியின் வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி செய்திருக்கிறார். புதிய வகுப்பறைகள், நவீன கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், செயல் வழிக்கற்றல் போன்றவை மூலம் இப்பள்ளியை தரம் வாய்ந்த பள்ளியாக மாற்றி யுள்ளார். ஆனால் சோளிங்கர் வட்டார கல்வி அலுவலராக உள்ள சி.முரு கன், தலைமையாசிரியர் சரவணன் மீதுள்ள சங்க விரோத காழ்ப்புணர்ச்சி யால் தொடர்ந்து உயரதிகாரிகளிடம் அவதூறு செய்திகளை தொடர்ந்து பரப்பி வந்துள்ளார். இதனால் மாவட்ட கல்வித்துறை வீரந்தாங்கள் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் பணியிடத்தை மாற்றியது. இந்த தகவலை அறிந்த மாண வர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து, தலைமை ஆசிரியர் பணி யிட மாறுதலுக்கு எதிர்ப்பு தெரி வித்து பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த அரசு பேருந்தை யும் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் தலை மையாசிரியர் பணியிட மாறுதலை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரி வித்தனர். இதனால் காவல்துறையி னர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் அருளரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, தங்களது கோரிக் கையை மனுவாக கொடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் தொடர்ந்து 10 நாட்களுக்கு தலைமையாசிரியர் சரவணன் பள்ளியிலேயே பணி யாற்றலாம் என்று அவர் உறுதி யளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.