tamilnadu

img

காலமானார்

 வேலூர், அக். 2- வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் சின்ன செட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூத்த தோழர் பி.சாமிநாதன் புதனன்று (அக். 2) காலமானார். இவர் 1964ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் கட்சி பல்வேறு பொறுப்புகளிலும், பீடி தொழிற்சங்க மாவட்டப் பொருளாளராகவும், குடியாத்தம் தாலுக்கா துணைத்தலைவராகவும் பணியாற்றினார். அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி.ராமச்சந்திரன், பி.காத்தவராயன், கே.சாமிநாதன், பேர்ணாம்பட்டு தாலுக்கா செயலாளர் பி.சாமிநாதன், ஆம்பூர் தாலுக்கா செயலாளர் வ.அருள் சீனிவாசன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதி நிகழ்ச்சி வியாழனன்று (அக். 3) நடைபெறுகிறது. இறந்த சாமிநாதனுக்கு எஸ்.முனியம்மா என்ற மனைவியும், லெனின், பகவத்சிங் என்ற மகன்களும், செம்மலர் என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.