வேலூர், ஜூலை 21- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயற்சித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு நளினி சிறையில் சக கைதியுடன் வாக்கு வாதம் ஏற் பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பெண் சிறைக் காவலர்களி டமும் வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான நளினி துணியால் தனது கழுத்தை நெரித்து தற் கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்து அவரது வழக்க றிஞர் புகழேந்தியை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, நளினியின் தற்கொலை முயற்சியை விரைவாக சிறைக் காவலர்கள் தடுத்ததால், எந்த வித அசம்பாவிதமும் இன்றி நளினி பாதுகாப்பாக சிறையில் உள்ள தாக சிறைத்துறை உயர் அதிகாரி கள் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.