tamilnadu

மனிதநேயத்தை வளர்த்துக் கொள்ள மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

வேலூர், ஜூலை 22- குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.எம். கோவிந்தராசனாரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளுவர் மேல்நி லைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ளஅவரது வெண்கலச்  சிலையை இஸ்ரோவின் சந்திரயான், மங்கள்யான்  திட்ட முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை திறந்து வைத்தார்.  நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகையில், “சந்திரயான் 2-இன் விண்வெளிப் பய ணம் இந்தியாவின் கல்வித் தரத்தை உலக நாடுக ளுக்கு உணர்த்துகிறது. அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் நாம் உலக அளவில் உயர்ந்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் கல்வித் தரம் வேதனையளிக்கும் வகையில் இருப்பது  தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்” என்றார். தமிழகத்தில் பெண்கள் கல்வியில் அபார வளர்ச்சி  பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் மாணவர்கள்  தேர்ச்சியில் பின்தங்கி வருவது வேதனையளிக்கிறது. இதை மாற்றியமைக்க வேண்டுமா னால் நீங்கள் கலா சார சீரழிவுகளை நாடாமல், கல்வியில் போதிய கவ னம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி மேலாண்மை அறங்காவலர்  கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.  திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரி யர் ஜி. புருஷோத்தமன் வரவேற்றார்.  சென்னை  எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வேந்தர் ஏ.சி.  சண்முகம், கே.எம்.ஜி. கல்லூரித் தலைவர் கே.எம்.ஜி.  சுந்தரவதனம், புலவர் வே. பதுமனார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.