tamilnadu

img

பத்திரிகையாளர்கள் ஓய்வூதிய விதிமுறைகளை தளர்த்த கோரிக்கை

ராணிப்பேட்டை,செப்.3- பத்திரிகையாளர்களுக்கு  ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என ராணிப்பேட்டையில்  நடைபெற்ற   டியூஜே பேரவைக் கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (டியூஜே) புதிதாக உருவாக்கப்பட உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் பேரவைக் கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் இந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் புருசோத்தமன் வரவேற்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர்  பி.எஸ்.டி. புருசோத்தமன் கலந்துகொண்டு உரையாற்றினார். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவராக வாலாஜா எம்.புருஷோத்தமன், செயலாள ராக எம்.ஏ.பல்தசார், பொருளாளராக ஏ.ஜி. லிங்கேஷ் புதிய நிர்வாகிளாக தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர் சண்முகவேல்,  மாநில  இணைச் செயலாளர் கே.ஹென்றி லாசரஸ், மாநில அமைப்புச் செயலாளர்கள் பி.ஆர்.சுப்பிரமணி,நெல்லை கிருஸ்டோபர், தமிழ்ச்செல்வன், நெல்லை மாவட்டச் செயலா ளர் மனோகரன்,  சென்னை மாவட்டச் செயலா ளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஓய்வு பெறும் பத்திரிகையாளர்களுக்கு பென்சன் தொகை வழங்க, அரசு விதிகளை  தளர்த்த வேண்டும், பணியின் போது மரண மடையும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும், குடும்ப நல ஊதியம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.