வேலூர், அக்.20- திருப்பத்தூர் சாராட்சி யராகப் பணிபுரிந்து வந்த பி.பிரியங்கா பங்கஜம் மதுரைக்கு பணி மாறுதலாகி சென்றதையடுத்து, திருப்பத்தூர் சார் ஆட்சிய ராக வந்தனா கார்க் பணி நியமனம் செய்யப்பட்டா. இதையடுத்து புதிய சார்ஆட்சியராக அவர் பொறுப்பேற்றார் . புதிய சாராட்சியர் வந்தனாகார்க், கடந்த 2017- ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலத்தில் உதவி ஆட்சி யராகப் பணியாற்றி வந்தார். பின்னர், புதுதில்லி யில் உள்ள சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை யில் உதவிச் செயலராக பணி புரிந்து வந்தார். அதை யடுத்து தற்போது திருப்பத்தூர் சாராட்சியராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, அவர் திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலர் ம.ப.சிவனருளை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சாராட்சியர் வந்தனா கார்க் செய்தியாளர்களிடம் கூறியது: திருப்பத்தூர் கோட்டத்து க்குட்பட்ட எந்தப் பிரச்சனை யாக இருந்தாலும் மக்கள் நேரில் சந்தித்து மனுக்களை அளிக்கலாம். கட்செவி அஞ்சல் மூலம் தகவல்களை அனுப்பலாம். திருப்பத்தூர் நகரில் சுகாதாரப் பணிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். டெங்கு பிரச்சனை குறித்து நகராட்சி நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ள ப்படும். இதுதவிர போக்கு வரத்து நெரிசல், பெண்குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலருடன் இணைந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக, முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ள ப்படும். விரைவில் திருப்பத்தூர் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலு வலர்களுடன் கலந்தா லோசனைக் கூட்டம் நடை பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.