குடியாத்தம், மே 24-குடியாத்தம் ‘சம்பவம்’ குறும்படத்தை பழம் பெரும் திரைப்பட சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் வெளியிட்டார். வாகனங்களில் அதிவேகமாக செல்லுவதால் ஏற்படும் விபத்துகள், முறையாக வாகனங்களை இயக்குதல் போன்ற விழிப்புணர்வு கருத்துகள் குறித்த ‘சம்பவம்’ என்ற குறும்படத்தை கிருபா சந்திரசேகர் இயக்கியுள்ளார்.இந்த குறும்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஜூடோ ரத்தினம் இல்லத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் மிட்டாளம் சே.மனோகரன் தலைமை தாங்கினார். குறும்பட இயக்குநர் கிருபா சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். குறும்பட குறுந்தகட்டை கலைமாமணி ஜூடோ ரத்தினம் வெளியிட கராத்தே மாஸ்டர் மக்களின் தோழன் கார்த்திக், ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.குறும்படத்தை வெளியிட்டு கலைமாமணி ஜூடோ ரத்தினம் பேசுகையில்,“இனி வருங்காலத்தில் தண்ணீர் தேவைகள் குறித்தும், மரம் வளர்த்தல், மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை நமது குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இயக்க வேண்டும்.இது போன்ற விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கி மத்திய, மாநில அரசின் விருதுகளை பெற வேண்டும்” என்றார்.நிகழ்ச்சியில் அன்பில் பாஸ்கரன், இளவரசன், தளபதி ரிஷி, உதய பிரகாஷ், பாலாஜி, யுவன், தினேஷ், விக்கி, மாஸ்டர் கராத்தே யுவராஜ், கோபி, திலீப், மோகன் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.