வேலூர், ஜூலை 22- வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்மு கம், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ். தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடு கிறார்கள். திமுக சார்பில் எம்.பி., எம்எல்ஏக் கள், முன்னாள் அமைச்சர்கள் தலை மையில் 69 பேரும் கொண்ட தேர்தல் பணிக் குழுவினர் நியமிக்கப் பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தலைமையில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளி லும் ஞாயிற்றுக்கிழமை களமிறங்கி யுள்ளனர். தொடர்ந்து, ஓரிரு நாள்களில் நிய மிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொறுப்பாளர்களும், அவர்களைச் சார்ந்த திமுகவினரும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, வேலூ ருக்கு வந்துள்ள மற்ற மாவட்ட திமுகவினர் வீதி வீதியாகச் சென்று கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கத் தொடங்கியுள்ள னர். வேலூர் மக்களவைத் தேர்தல் பிரசாரம் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. வேலூர் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு வாக்குகள் கோரி வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியம், நாட்ராம்பள்ளி ஒன்றியங்களில் சிபிஎம் சார்பில் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். நாட்ராம்பள்ளி ஒன்றியத்தில், வடக்கு பட்டு, சிக்னாங்குப்பம், தும்பேரி, அலஞ்சிபுரம், அம்பலூர், நல்லாங்குப்பம், மேட்டுப்பாளை யம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் கதிர் ஆனந் தீவிரப் பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரத்தில், திமுக ஒன்றிய பொறுப்பாளர் சூரியகுமார், சிபிஎம் வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர் இந்துமதி, உள்ளிட்ட திமுக, சிபிஎம் கட்சி பொறுப்பா ளர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
தொழிற்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனை...
வேலூர் மக்களவைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய் தால் வாணியம்பாடி தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரும் வகை யில் புதிய தொழிற்பேட்டை அமைக் கப்படும். வாணியம்பாடி நகரின் மையப் பகுதியில் அனைத்து வசதி களுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவ மனை அமைக்கப்படும். காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுப் பேன் என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குறுதி அளித்தார்.