tamilnadu

மதுபானக் கடையை அகற்றுக சிபிஎம் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை,பிப்.16 ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வன்னி வேடு ஊராட்சியில்ர பிக்நகர், தென்றல் நகர் பகுதியில் ஏற்கனவே மூன்று  அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில்  நான்காவ தாக ஒரு டாஸ்மாக் கடையை திறந்தனர். கடந்த காலங்களில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் இரண்டு முறையும், இராணிப் பேட்டை சார் ஆட்சியரிடமும் பொதுமக்கள் அப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது  என மனு அளித்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு  வன்னிவேடு ஊராட்சியில் நான்காவதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தினர். நிகழ்விடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் கடையை  மூடிவிடுவதாக உறுதிய ளித்தனர். ஆனால் கடையை மூடாமல் சனிக்கிழமை (பிப். 16) கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். இது குறித்து தகவலறிந்த பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கடை முன்பு திரண்டனர். கடை அமைந்திருக்கும் இடத்தின் உரிமையாளரான காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உமாபதி குடிகாரர்களுடன் திரண்டு கடையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா காவல்துறையினர் குடிகாரர்களுக்கு ஆதரவாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் அங்கு திரண்ட பெண்களை தரக்குறைவாக ஒருமையில் (வாடி, போடி) பேசியதோடு, கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் கைது செய்தனர். காவல் துறையினர் தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து கைது செய்யப் பட்டவர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒருங்கிணைந்த) வேலூர்  மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி விடுத்துள்ள அறிக்கையில், அரசு நிர்வா கம் அளித்த வாக்குறு தியின்படி கடையை மூடுவதற்கு பதிலாக திறந்த செயலை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அங்கு திரண்ட பெண்களையும் மாதர் சங்கத்தினரையும் தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் வேலூர் மாவட்டக் குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.