மு.க.ஸ்டாலின் கேள்வி
கொரானோ பரிசோதனைக் கருவிகள் எத் தனை, என்ன விலை, எவ்வளவு குறை வான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் மேலும் பதிவிட்டிருப்பதா வது “நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அருண்ஷோரி சொல்கிறார்
இந்தியாவில் வைரஸ் தொற்றை எதிர்கொள்வ தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக கேரளா, ஒடிசா, தெலுங்கானா, பஞ்சாப் என பல மாநி லங்களை குறிப்பிடலாம். ஆனால் மிக மிக மோசமாக செயல்படும் மாநிலம் எது தெரியுமா? பா.ஜ.க. ஆட்சி கவிழ்ப்பு நடத்தி கைப்பற்றிய மத்திய பிரதேசம்தான்! இது பற்றி அவர்களது அருண்ஷோரியே கீழ்கண்ட வாறு தனது டிவிட்டரில் கூறுகிறார்:
“அங்கு சுகாதார அமைச்சரே இல்லை;ஏன்? அமைச்சரவை என்பதே இல்லை! முதன்மை சுகாதார செயலாளர்/ 75க்கும் அதிகமான சுகாதார துறை அதி காரிகள்/45 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலருக்கு தொற்று உள்ளது.” ஒரு பெரிய அதிகாரியின் மகன் வெளி நாட்டில் இருந்து வைரஸ் கொண்டு வந்தார். அது மறைக்கப்பட்டது. அந்த அதிகாரியும் இன்னும் பலரும் வைரஸ் பெற்றனர். எதிர்கட்சிகள் ம.பி.யில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என கோரியுள்ளனர்.
1800 பேர்...
உத்தர்காண்ட் மாநிலத்தில் சிக்கியுள்ள 1800 வசதி படைத்த குஜராத்திகள் தமது சொந்த ஊர் களுக்கு வர சொகுசு பேருந்துகளை குஜராத் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் பாவப்பட்ட குஜராத் இடம் பெயர் தொழிலாளர்கள் நிர்கதியில் விடப்பட்டுள்ளனர் என இந்தியா டுடே இதழை மேற்கோள் காட்டி ரோஹினி சிங் எனும் பத்திரிக்கை யாளர் பதிவு செய்துள்ளார்.
அது மட்டும் எப்படி?
புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமருக்கு சொகுசு பங்களா கட்டுவதற்கு தொடக்க நிதி ரூ 922 கோடி ஒதுக்கீடு செய்வது குறித்து 22.04.2020 அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனும் செய்தியை சுட்டிக்காட்டி சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி டிவிட்டர் பதிவு: “ஏழைகளுக்கு உணவு அளிக்க பணம் இல்லை; அவர்களின் வாழ்வா தரத்திற்கு பணம் இல்லை; இடம் பெயர் தொழிலா ளர்கள் தமது சொந்த ஊருக்கு திரும்ப விசேட பேருந்து கள் அல்லது ரயில்கள் ஏற்பாடு செய்ய பணம் இல்லை; ஆனால் பிரதமருக்கு சொகுசு பங்களாவும் நாடாளு மன்றத்திற்கு புதிய கட்டிடத்திற்கும் பணம் உள்ளதாம்!”
9 மாத குழந்தைக்கு...
உத்தரகண்ட் மாநிலத்தில் ஒன்பது மாத குழந் தைக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை சமீபத்தில் தில்லிக்கு சென்று திரும்பியுள்ளார். அவரிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவியுள்ளது. உத்தரகண்ட் மாநி லத்தில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ராஜ்நாத் வெறும் பேச்சு
இதற்கிடையில் ஏதாவது ஒரு செய்தியை ட்வீட் செய்து ஆறுதலடைந்து கொள்ளும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமையன்றும் ட்வீட் செய்ய மறக்கவில்லை. தமது ட்வீட்டில், “ கொரோனா நிலைமை குறித்து அமைச்சர்கள், அரசு அதிகாரி களிடம் பேசியதாகவும். மக்கள் சந்தித்து வரும் துய ரங்களை தணிப்பதற்கான வழிகள், மக்களுக்கு நிவா ரணம் வழங்குவதில் அமைச்சகங்களின் பங்கு பற்றி விவாதித்ததாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
துயரத்தில் விவசாயிகள்
கரும்பு வெட்டுவது உள்ளிட்ட அதன் சார்புத் தொழில் களில் ஈடுபட்டுள்ள 1.31 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதம் சீர்குலையுமோ?
பஞ்சாபில் பல இடங்களில் கோவிட் 19 வைரசால் இறந்தவர்களின் உறவினர்கள், மகன் மற்றும் மகள் உட்பட, இறுதி சடங்குகள் செய்ய முன்வர மறுப்பு. காவல்துறை அதிகாரிகள் மற்றும் கிராம அலு வலர்கள்தான் இறுதி சடங்குகள் செய்வதாக டிரிபியூன் இண்டியா இதழ் தெரிவிக்கிறது.
மருத்துவ ஊழியர் கதி
“மருத்துவர்களின் பாதுகாப்புக்கான 70 லட்சம் உடைகளுக்கான கொள்முதல் ஆணைகள் 39 உள்நாட்டு நிறுவனங்களிடம் தரப்பட்டன. ஆனால் இதில் 4 ஆணைகள்தான் ஊரடங்கிற்கு முன்பு தரப் பட்டது. மீதி 35ல் 24 ஆணைகள் ஏப்ரல் 1ம் தேதிதான் தரப்பட்டன. இந்த தாமதம் காரணமாகவும் ஊரடங்கு காரணமாகவும் இப்பொழுது நம்மிடம் தேவையில் 1% மட்டுமே உள்ளன” என்னே மத்திய அரசாங்கத்தின் செயல் திறமை? ஏன், ஏராளமான மருத்துவ ஊழி யர்களுக்கு தொற்று பரவுகிறது என்பது தெரிகிறதா?
‘எடிட்டர் கில்டு’ கண்டனம்
பிரதமரின் ஊரடங்கு அறிவிப்பிற்கு பிறகு இடம் பெயர் தொழிலாளர்கள் பெரும் அளவில் தமது ஊர்களுக்கு சென்றதற்கு பத்திரிக்கைகளின் பொய் யான செய்திகளே காரணம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறி இருப்பதற்கு “எடிட்டர்ஸ் கில்டு” எனும் பத்திரிக்கை ஆசிரியர்கள் அமைப்பு கடும் கண்டனம் செய்துள்ளது. மேலும் அரசாங்கம் சொல்வதை மட் டுமே வெளியிட வேண்டும் என உச்சநீதி மன்றம் குறிப் பிட்டதற்கும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
அறிஞர் சொல்வதென்ன?
நோபல் பரிசு பொருளாதார வல்லுநர்கள் அமர்த்தியா சென்/அபிஜித் பானர்ஜி மற்றும் ரகுராம்ராஜன் கூட்டாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரையில் கூறுகின்றனர்: “ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. இப்போதைய மிகப்பெரிய கவலை பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் தள்ளப்படுவதுதான். இதனை தடுப்பதே அரசாங்கங்களின் உடனடி கடமையாக இருக்க வேண்டும்.”
இரட்டை வேடம்
“வைரஸ் தாக்குதல் என்பது பேரிடர் காலம். எனவே எவரும் பா.ஜ.க. மாநில அல்லது மத்திய அரசாங்கத்தை விமர்சிக்க கூடாது; அப்படி விமர்சித்தால் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் முன்னாள் பா.ஜ.க.முதல்வர் பட்னாவிஸ் மகா ராஷ்ட்ரா முதல்வரை விமர்சிக்கலாம்; அமித்ஷா உத்தவ் தாக்கரேவை கண்டிக்கலாம்; ஜார்கண்ட் அர சாங்கத்தை பா.ஜ.க.வினர் தினமும் நிந்திக்கலாம்; மேற்குவங்க அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் கண்டன கடிதம் அனுப்பலாம். என்னே இவர்களின் இரட்டை முகம்?”
--- என்.டி.டி.வி.யில் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா
கார்டு இல்லாவிட்டாலும்
ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருட் கள் தரப்படும் எனும் மத்திய அரசாங்கத்தின் முடிவு தவறு எனவும் இதன் காரணமாக சுமார் 10 கோடி பேர் உணவு மறுக்கப்படுவர் எனவும் ஜீன் டெரிஸ் உட்பட பிரபல பொருளாதார வல்லுநர்கள் அபாய சங்கு எழுப்பி யுள்ளனர். உ.பி.ல் 2.85 கோடி/பீகாரில் 1.7 கோடி/ம.பி.யில் 95 லட்சம்/குஜராத்தில் 60 லட்சம் என ரேசன் கார்டு இல்லாதோர் பட்டியல் உள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உட்பட அனைவருக்கும் உணவு பொருட்கள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைபாடு ஆகும்.
சிபிஎம் கண்டனம்
சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலை கழக மாணவர் தலைவர்கள் உட்பட பலரை ஊர டங்கு சூழலை தவறாக பயன்படுத்தி கைது செய்துள்ள தற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைகுழு வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பிரதமர் மோடி தனது சமீபத்திய உரையில் இந்தி யாவில் முதல் வைரஸ் தொற்று உருவாவதற்கு முன்பே அனைத்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டோம் என பெருமை பேசினார். ஆனால் இது உண்மை அல்ல என “factcheck” எனும் இணைய ஆய்வு தெரி வித்துள்ளது. சீனா/ஹாங்காங்கிலிருந்து வந்த வர்கள்தான் பரிசோதனை செய்யப்பட்டனர். இத்தாலி /அமெரிக்கா/ஸ்பெயின்/வளைகுடா நாடுகளிலிருந்து வருபவர்கள் மார்ச் 4ம் தேதிக்கு பிறகுதான் பரிசோதிக் கப்பட்டனர். அதற்குள் வைரஸ் இந்தியாவிற்குள் கணி சமாக புகுந்துவிட்டது.
கூடுதல் சவால்!
வைரஸ் பரவல் சூழலை பயன்படுத்தி எந் தெந்த நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றன என்பதை ‘தி கான்வர் சேஷன்’ எனும் இதழ் பட்டியல் இட்டுள்ளது. 1. ஹங் கேரி. 2. இந்தியா 3. ஜிம்பாப்வே 4. பெரு 5. அமெ.
வைரஸ் வரி போடலாமே!
இந்தியாவில் உள்ள ரூ 1000கோடிக்கு மேல் சொத்து உள்ள 953 குடும்பங்களுக்கு வெறும் 4% கோவிட் வைரஸ் வரி போட்டால் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் இதனை வைரசுக்கு எதி ரான போராட்டத்தில் பயன்படுத்த முடியும் எனவும் சுப்பி ரமணியன் எனும் பொருளாதார நிபுணர் ஸ்க்ரால் இதழில் எழுதியுள்ளார்.
தொகுப்பு : அன்வர் உசேன்