tamilnadu

பள்ளி மாணவர்களுக்கு கேரம் போட்டி

வேலூர், அக்.21- வேலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவி களுக்கான கேரம் போட்டிகள் வேலூரில்(24 ஆம் தேதி) வியாழக்கிழமை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் சாலையில் உள்ள சத்துவாச்சாரி அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது.  மழலை வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை என இரு பிரிவுகளாக இந்த போட்டி கள் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது  பள்ளித் தலைமையாசிரியரின் கடிதத்துடன் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே போட்டி யில் பங்கேற்க முடியும்.  ஒரு பள்ளியில் இருந்து ஒற்றையர் போட்டியில் ஒரு வரும், இரட்டையர் போட்டிக்கு ஒரு ஜோடிக்கு மிகாமலும் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் தங்களது பள்ளி சீருடை யுடன்தான் வரவேண்டும். பங்கேற்பாளர்கள் தங்களுடைய சொந்த ‘ஸ்டிரைகர்ஸ்’ கொண்டு வரவேண்டும். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவி லானப் போட்டிக்கு தகுதி பெறுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரை 0416-2221721 என்ற எண்ணிலோ அல்லது 74017 03483 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.