வேலூர், மே 28-வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த முசிரி சாலையிலுள்ள அரசன் அக்ரோ நிறுவனத்தில் ஜனவரி மாதம் முதல் தேதி விடுமுறை எடுத்ததற்காக 60 க்கும் மேற்பட்டோருக்கு தொழிலாளர்களுக்கு பணி அளிக்க மறுத்து வரும் நிர்வாகத்தின் மீது தொழிற் சாலை ஆய்வுதுறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட் டம் நடத்தினர். சட்டப்படி வார விடுப்பு, அரசு விடுமுறை மற்றும் தொழிற் சாலை விதிமுறைகளை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிற்சாலை நிர்வாகம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தர்ணா போராட் டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.பாபு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தா. வெங்கடேசன், கட்டுமான சங்க செயலாளர் ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.நிர்வாக முறைகேடுகள் குறித்து சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.பாபு கூறியதாவது:-கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அரசன் பால் குளிரூட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எந்த சட்ட சலுகைகள் இன்றி வேலை செய்து வருகிறார்கள். இதே நிறுவனத்தில் தனியாக அரசன் நிறுவனத்தின் பெயரிலேயே பாலிதின் பேப்பர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 80 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை இன்றியும், எந்த சட்ட சலுகைகள் இன்றியும், எந்த அரசு விடுமுறையும் அளிக்க மறுத்தும்,மிகை நேர பணியும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கி கொண்டு அதை முறைப்படி கணக்கிட மறுத்து வருகிறார்கள்”.மேலும், பணிமறுக்கப்பட்ட தொழிலாளர்கள் பணி செய்த இடங்களில், புதிதாக வெளி மாநில ஆட்களையும் நியமனம் செய்து சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.