சென்னை,மார்ச் 5- சிவகாசியில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற் காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சும், செயல்பாடு களும் பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகை யில் அமைந்துள்ளன. அதன் கொடூர அடையாளமாக, விருது நகர் மாவட்ட அதிமுக அரசியலில் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல்போக்கு குறித்த செய்தியை வெளியிட்ட ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகை யின் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்கு தலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலைவெறி தாக்குதலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தாக்குதலில் ஈடு பட்டவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமாக நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பிறகு குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைக்கும் தந்திரத்தை இந்த நிகழ்விலாவது கைவிட வேண்டும். எப்போது யாரைப்பற்றி பேசினாலும் “அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்” என்று அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தி னால், அராஜகமாக கொக்கரித்து வரும் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?. தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்கு உரிய தரமான சிகிச்சையும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.