வேலூர், அக்.4- வேலூரில் அனைத்து வங்கிகள் சார்பாக “வாடிக்கையாளர்களை நோக்கி” என்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக பாரத ஸ்டேட் வங்கி சென்னை மற்றும் புதுச்சேரி தலைமை யிட பொது மேலாளர் ஷெர்லி தாமஸ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மாயா, வேலூர் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் சேது முருக துரை மற்றும் ஏராளமான வங்கி மேலா ளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது :- இவ்வரங்கில் 32 வங்கிகளின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அக்.5 ஆம் தேதியும் தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய வியாபார கடன், வீட்டுக் கடன், சுய உதவிக்குழு கடன் போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். ஒரே நாளில் 3 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் வீட்டு கடன் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.